×

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராகிறார் ரோஜர் பின்னி?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது..!

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்க வாரியத்தின் பொறுப்பாளர்கள் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிசிசிஐ தலைவராக கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்று கொண்டனர். இவர்கள் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் ஜெய் ஷா மீண்டும் செயலளராக போட்டியிடுகிறார்.

ஆனால் கங்குலி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் செயலாளராக ஜெய் ஷா, துணை தலைவராக ராஜீவ் சுக்லா, பொருளாளராக அஷிஷ் ஷெலர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சௌரவ் கங்குலி ஐசிசி கிரிக்கெட் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Roger Binny ,Indian Cricket Board , Roger Binny will be the new president of the Indian Cricket Board?.. Official announcement will be made soon..!
× RELATED மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஐபிஎல்...